ஹமாஸ் தலைமையகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் தொடர்ச்சியான ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் இஸ்ரேலும் இரவு பகல் பாராமல் இடைவிடாமல் வான்வழித் தாக்குதலை காசா பகுதி மீது நடத்தி வருகிறது.
இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் தங்களது மத்திய தலைமையகமும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளரும் இதை உறுதிப்படுத்தும் வகையில், ஹமாஸ் இயக்க பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் தலைமையகமத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ளார்.
ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இஸ்ரேலிய ராணுவத் தரப்பு, 6 மணி நேரத்தில் 85 முறை தாக்குதல் நடத்தியிருக்கோம் என்று கூறியிருக்கிறது.
இஸ்ரேல் கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான தாக்குதலில் இதுவரை 30 பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 300 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஹமாஸ் இயக்கத் தாக்குதல் 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 16 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications