மீண்டும் ஒரு வலுவான புயல் உருவாகிறது
Subscribe to Oneindia Tamil

சென்னைக்கு கிழக்கே ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 650 கிலோ மீட்டர் தொலைவிலும் இப்புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
இப்புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதலில் வடமேற்கிலும் பின்னர் தென்மேற்கிலும் வடதமிழ்நாடு- தென் ஆந்திரா நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அந்தமான் தீவுப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. வங்கக் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இப்புதிய புயலால் அனைத்து ஆந்திர மாநில கடலோர துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது












Click it and Unblock the Notifications