கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே என்று நான் சொல்லவே இல்லை: நாராயணசாமி அந்தர் பல்டி

இது குறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு உலையில் கடந்த அக்டோபர் மாதம் யுரேனியம் நிரப்பி பரிசோதனை தொடங்கப்பட்டது. உலக அளவிலான அணுசக்தி வல்லுனர்கள் இதை பார்வையிட்டு அனுமதி அளித்துள்ளனர். மேலும், நமது நாட்டின் அணு பாதுகாப்புக் கழக வல்லுனர்களும் பார்வையிட்டு அனுமதி வழங்கி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் மேற்பார்வையில் வெப்பக் காற்று செலுத்தப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. இந்த பரிசோதனைகள் முடிந்து டிசம்பர் மாதம் 15ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்படும்.
100 சதவீத மின் உற்பத்தியை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அங்கு கிடைக்கும் 1,000 மெகாவாட் மின்சாரத்தில் 450 மெகாவாட் தமிழகத்திற்கு வழங்கப்படும். 37.5 மெகாவாட் புதுவைக்கும், 122 மெகாவாட் கேரளாவுக்கும், 225 மெகாவாட் கர்நாடகாவுக்கும் அனுப்பப்படும். மீதம் உள்ள மின்சாரம் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று நான் சொல்லவில்லை. கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 1,000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி நான் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று தான் கூறினேன்.
2வது அணு உலையில் 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கும். அதில் 950 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அப்போது தமிழகத்திற்கு 2 அணு உலைகளிலும் சேர்த்து 950 மெகாவாட் மின்சாரமும்,. புதுவைக்கு 67 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications