தலித்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் பேச்சு: தேவர் இன கூட்டமைப்பின் தலைவர் கைது
ராமநாதபுரம்: முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய தேவர் இன கூட்டமைப்பின் தலைவர் சண்முகய்யா பாண்டியன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதுபாண்டியர் நினைவு தினம், தேவர் குருபூஜையின் போது நடந்த கலவரங்கள், கொலைகளைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, பரமக்குடி, கடலாடி, கமுதி பகுதிகளில் இன்னும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந் நிலையில் முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் தேவர் இன கூட்டமைப்பின் தலைவர் சண்முகய்யா பாண்டியன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தனது சமூகத்தினர் மத்தியில் பேசிய அவர், இரு ஜாதியினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.
இதையடுத்து கமுதி துணை எஸ்பி அபிநவ் குமார், முதுகுளத்தூர் துணை எஸ்பி விக்கிரமன், கீழக்கரை டிஎஸ்பி சோமசுந்தர சேகர் ஆகியோர் அடங்கிய தனிப் படை போலீசார் சண்முகய்யா பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெருமாள், துரை சிங்கம், பாலமுருகன், சிவன்பாண்டி, சுப்பிரமணியன், சின்னத்துரை, கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் முதுகுளத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி மோகன்ராம் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் சண்முகய்யா பாண்டியன் உள்பட 6 பேர் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் மதுரை மத்திய சிறையிலும், சிவன்பாண்டி, கார்த்திக் ஆகியோர் மைனர் வயதினர் என்பதால் மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications