சென்னை அண்ணா நகரில் பாரத் பெட்ரோலியம் அலுவலகத்தில் தீ: ஊழியர்கள் அலறி ஓட்டம்
சென்னை: சென்னை அண்ணா நகர் பாரத் பெட்ரோலியம் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அண்ணாநகர் 15வது மெயின் ரோட்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அலுவலகம் உள்ளது. இந்த 4 மாடி கட்டிடத்தில் 350 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இன்று காலை 9.30 மணிக்கு இந்தக் கட்டிடத்தின் 3வது மாடியில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மைக் மூலம் அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பல தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தீயை அணைத்தனர்.
3வது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதில் ஏராளமான கம்ப்யூட்டர்கள் சாம்பலாகிவிட்டன.












Click it and Unblock the Notifications