நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு ஜெயலலிதா கல்தா
சென்னை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இருவரை கட்சியில் இருந்து நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுகவின் கொள்கை, குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி அதிமுகவிற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை (மேலப்பாளையம் பகுதிக் கழக அவைத் தலைவர்), மற்றும் அ.பெரியதுரை (19வது வட்டக் கழகச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.