For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைன் போர்னோகிராபி: பிஞ்சில் பழுக்கும் இங்கிலாந்து சிறுவர்கள்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Kids internet
லண்டன்: இங்கிலாந்தில் மிக இளம் வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது அந்த நாட்டு காவல்துறையையும், அரசையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் வரை கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைதாகியுள்ளனராம்.

ஆன்லைன் மூலம் போர்னோ படங்களைப் பார்த்து இவர்கள் கெட்டுச் சீரழிவதாகவும், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளிச் சிறார்களிடையே இத்தகையக குற்றப் போக்கு அதிகரித்து வருவது காவல்துறையினரை அதிர வைத்துள்ளதாம். இங்கிலாந்து காவல்துறை கடந்த ஒரு வருடத்தில் 10 வயது சிறுவன் ஒருவனை கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளது. மேலும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைதாகியுள்ளனராம்.

ஆன்லைன் போர்னோகிராபிதான் பெருமளவில் இளம் சிறார்கள் மனதைப் பாழ்படுத்தி வருவதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

செக்ஸ் என்றால் என்ன, செக்ஸ் உறவு என்றால் என்ன, எப்படி அதை அடைவது என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்டர்நெட்டில் படு தாராளமாக கிடைப்பது இளம் சிறார்களிடையே பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் சிறார்கள் மத்தியில் பாலியல் விஷயங்களில் மனதில் விஷத்தைக் கலப்பது போல இன்டர்நெட் தற்போது இருக்கிறது. இன்டர்நெட்டில் தேவையில்லாததைப் பார்த்துத்தான் இளம் சிறார்கள் கெட்டுப் போகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மைதான் என்பது போல இப்போது 10 வயது சிறுவன் கற்பழிப்பு வழக்கில் கைதாகியிருப்பது உள்ளது என்கிறார் குழந்தைகளுக்கான இன்டர்நெட் பாதுகாப்பு கூட்டணி என்ற அமைப்பின் ஜான் கார்.

இன்டர்நெட்டில் ஆபாசப் படம் பார்ப்பது உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் ஒருவர் கம்ப்யூட்டர் வாங்கும்போது பல்வேறு வகையான பில்டர்களையும் வாங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்களாம்.

ஆனால் இந்த நடவடிக்கைகளால் ஆபாசப் படம் பார்ப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறப்படுகிறது. போலீஸாரிடம் சிக்கிய ஒரு சிறுவனின் கதையைப் பாருங்கள்...

12 வயதான சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 வயது சிறுமியை கற்பழித்து விட்டான். அவனிடம் விசாரணை நடத்தியபோது ஆன்லைன் போர்னோகிராபி படத்தைப் பார்த்த அவன், தானும் வளர்ந்த ஒரு ஆண்மகன்தான் என்பதை நிரூபித்துக் கொள்ள அந்த சிறுமியை கற்பழித்தானாம். அதாவது தனது ஆண்மையைப் பரிசோதித்துப் பார்க்க இப்படிச் செய்தானாம்.

அந்தப் பெண்ணைக் கற்பழிக்க முடிவு செய்த பின்னர் பல ஆபாசப் பட தளங்களைப் பார்த்து திறமையை வளர்த்துக் கொண்டானாம். பின்னர் ஒரு தோட்ட வீட்டின் பின்புறம் உள்ள ஷெட்டுக்கு அந்த சிறுமியைக் கூட்டிக் கொண்டு போய், தான் வீடியோ படத்தில் பார்த்தது போல செய்து பலாத்காரம் செய்துள்ளான்.

அந்த சிறுமி தனது பெற்றோரிடம் வயிறு வலிப்பதாக கூறியதால் அவர்கள் என்ன ஏது என்று விசாரித்தபோது உண்மை தெரிய வந்ததாம்.

அந்த சிறுவன் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 2011 ஜனவரி 31ம் தேதி வரை பலமுறை இப்படி அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தனது சக நண்பன் ஒருவன் முன்னிலையிலும் கூட அந்த சிறுமியை அவன் பலாத்காரம் செய்துள்ளான்.

தற்போது அவன் சமூக சேவகர்களின் நேரடிக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான். 18 வயது வரை அவனை இவர்கள் கண்காணித்து வருவார்களாம்.

நம் ஊரிலும் தற்போது பாலியல் குற்றங்களுக்காக கைதாகும் பள்ளிமாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு காரணம் இணையதள பயன்பாடும், செல்போன்களில் ஆபாசப் படங்களை பார்ப்பதும்தான் காரணம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

English summary
Children as young as ten are being arrested on suspicion of rape amid fears that online pornography is twisting their view of sex and relationships.The scale of sexual offences committed by primary school children was revealed in disturbing figures from police forces across the country.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X