கசாப்புக்கு திடீர் தூக்கின் பின்னணியில் ஐ.நா.வின் மரண தண்டனை எதிர்ப்பு தீர்மானம்?

Subscribe to Oneindia Tamil

UN Logo
மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு திடீரென தூக்குத் தண்டனை நிறைவேற்றபப்ட்டதின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் மரண தண்டனைக்கு எதிரான தீர்மான விவகாரம் இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

பல்வேறு நாடுகளில் மரண தண்டனை முறை இன்றளவும் நீடித்து வருகிறது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ மரண தண்டனை முறைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

அத்தீர்மானத்தில் மரண தண்டனையை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழானோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது. மரண தண்டனை விதிப்பதற்கான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 110 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகள் எதிராக வாக்களித்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

மரண தண்டனைக்கு எதிராக வாக்களித்த மறுநாளே அஜ்மல் கசாப்பை இந்தியா தூக்கிலிட்டிருப்பது என்பது ' மரண தண்டனை'யை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காகவா? என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+