வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு ஜெயலலிதா பதில் சொல்லியே ஆக வேண்டும்: மு.க. ஸ்டாலின்

உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார்.
இந்நிலையில் இது குறித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளால் வீரபாண்டி ஆறுமுகம் பாதிக்கப்பட்டார். அவரது மரணத்திற்கு ஜெயலலிதா பதில் கூறியே ஆக வேண்டும். இதற்கு காலம் நிச்சயமாக பதில் சொல்லும். வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு காரணமாக அமைந்த கொடுமைகள், அக்கிரமங்களுக்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்றார்.
சேலம் அங்கம்மாள் காலனி குடிசைக்கு தீ வைத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் கடந்த மாதம் தான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications