வால்பாறை மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து- 7 பேர் பலி- 51 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: வால்பாறையிலிருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 51பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து பழனி நோக்கி மலைப்பாதையில் நேற்று இரவு 10 மணியளவில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. 3-வது கொண்டை ஓசி வளைவில் திரும்பும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்து 200 அடி பள்ளத்தில் அப்படியே விழ்ந்தது.
பள்ளத்தில் உருண்டு ஓடிய பேருந்து மரங்களில் சிக்கிக் கொண்டது. அப்போது அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பேருந்தில் சிக்கியோர் மீட்கப்பட்டனர். இவ்விபத்தில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். 51 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications