ஓமன் விமான டயர் ‘டமால்’ - தரை இறங்கிய போது விபரீதம்! 155 சென்னை பயணிகள் பத்திரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்று தரை இறங்கிய போது பயங்கர சப்தத்துடன் டயர் வெடித்தது. விமானியின் சாமர்த்தியத்தால் 155 பயணிகளும் பத்திரமாக உயிர் தப்பினர்.
ஓமனில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் சுமார் 155 பயணிகள் இருந்தனர். விமான நிலையத்தில் தரை இறங்கிக் கொண்டிருந்த போது டமால் என முன்பக்க டயர் வெடித்தது. விமானமோ பயங்கரமாக குலுங்க பயணிகள் பீதியில் ஆழ்ந்தனர். இப்பொழுது அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வேண்டிய பொறுப்பில் இருந்த விமானி, விமானத்தை சாமர்த்தியமாக ஓட்டி சரியான இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தினார்.
விமானத்தைவிட்டு வெளியேறும் வரை உயிரைக் கையில் பிடித்திருந்த பயணிகள் விமானிக்கு நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications