புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மீசை வளர்த்து பிரசாரம்!

ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி இந்த நூதனப் பிரசாரம் தொடங்கி மாதம் முழுவதும் நடக்கும். இதற்காக ‘முவம்பர்' என்ற பெயரில் இயக்கமாக இதை நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைவோர் இந்த மாதம் முழுவதும் மீசை வளர்த்தி பிராஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபடுவோர். மேலும் புற்றுநோய் கழகத்திற்காக நிதி சேகரிப்பிலும் ஈடுபடுவர்.
இதுகுறித்து முவம்பர் இயக்கத்தின் தலைமை செயலதிகாரியும், இணை நிறுவனருமான ஆடம் கரோன் கூறுகையில், இந்த ஆண்டு இதுவரை 7 லட்சம் பேர் எங்களது இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இது 10 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த இயக்கத்தை 2003ம் ஆண்டு 30 பேருடன் தொடங்கினோம். இன்று இது லட்சக்கணக்கான உறுப்பினர்களுடன் விஸ்தீரணமாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
முதலில் வேடிக்கையாகத்தான் இதைத் தொடங்கினோம். மீசை வளர்ப்பதை ஊக்குவிப்பது என்பது முதல் காரணம். பின்னர் பிராஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இது மாறியது.
மீசை வளர்த்தால் நாலு பேர் நம்மிடம் அதுகுறித்துக் கேட்பார்கள். அப்போது பிராஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு நிதி சேகரிப்போம். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 8 லட்சத்து 55 ஆயிரத்து 203 பேர் பிரசாரம் செய்து 126.3 மில்லியன் டாலர் நிதியை சேகரித்தனர் என்றார் ஆடம்.
பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிறைய அமைப்புகள், பிரசாரங்கள், இயக்கங்கள் உள்ளன. ஆனால் பிராஸ்டேட் புற்றுநோய்க்கு எதிரான பிரசாரம் பெரிய அளவில் இல்லை. எனவேதான் இதை நாங்கள் செய்ய ஆரம்பித்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications