தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள்!

சட்டசபை மட்டுமல்லாமல் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கட்டடமான புனித ஜார்ஜ் கோட்டையைத்தான் இப்படி விளக்கொளியால் தேவலோகம் போல மாற்றவுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை வைரவிழா வரும் 30-ந் தேதி பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக சட்டசபை, தலைமை செயலக கட்டிடங்கள் பொலிவூட்டப்படுகின்றன.
கடற்கரை சாலையில் சட்டசபை செல்லும் வழியில் இருபுறமும் சரவிளக்குகளால் தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது. சட்டசபை முழுவதும் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. மரங்களிலும் சரவிளக்குகள் தோரணமாக தொங்க விடப்பட்டுள்ளன.
சட்டசபை வைரவிழா நடைபெறவுள்ள பேரவை மண்டபத்தின் அழகுக்கு அழகு சேர்க்கப்படுகிறது. வைரவிழாவுக்காக சில மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. வைரவிழாவுக்காக சட்டசபை உள்பட தலைமை செயலக வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக மெருகூட்டப்படுகிறது.
வைரவிழாவுக்காக, சட்டசபை வளாகத்தில் வண்ண விளக்குகள், குழல் விளக்குகள், அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. சரவிளக்குகளால் தோரணம் அமைத்துள்ளனர். இந்த விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் விரைவில் சட்டசபை ஜொலிக்கும்.
தலைநகர் சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் தற்போது கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கு மின்தடை அமல் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் துடித்துத் துவண்டு போயுள்ளனர். ஒரு தொழிலையும் செய்ய முடியவில்லை. சரியாக சட்னி கூட அரைக்க முடியவில்லை. மக்கள் கரண்ட் இல்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக சட்டசபையை ஆயிரக்கணக்கான சரவிளக்குள் மூலம் அலங்கரிக்கவுள்ளது அரசு.












Click it and Unblock the Notifications