சோனியா பிறந்த நாளில் புதிய கட்சி தொடங்கும் எதியூரப்பா!

முதலில் கர்நாடக மாநிலம் ஹவேரியில் மாநாடு நடத்தி டிசம்பர் 10ம் தேதி தான் புதிய கட்சியைத் தொடங்க எதியூரப்பா திட்டமிட்டிருந்தார். இந் நிலையில் அதை திடீரென டிசம்பர் மாதம் 9ம் தேதிக்கு மாற்றியுள்ளார். இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த தினமாகும்.
சில காலத்துக்கு முன் பாஜக தலைமை தனக்கு மீண்டும் முதல்வர் பதவியைத் தர மறுத்தபோது தனியே ஒரு அலுவலகத்தை ஆரம்பித்த எதியூரப்பா அங்கே சோனியா காந்தியின் படத்தையும் மாட்டியதும் குறிப்பிடத்தக்கது. சில நாட்கள் அந்தப் படத்தை வைத்திருந்து பின்னர் அதை அகற்றினார். மேலும் தனது அலுவலகத்தைத் திறந்த தினத்தன்று சோனியாவை வெகுவாகப் பாராட்டியும் பேசினார்.
இந் நிலையில் தனது புதிய கட்சியை சோனியாவின் பிறந்த நாளன்று அவர் தொடங்குவது பலரையும் புருவம் உயரச் செய்துள்ளது.
இது எதிர்பாராதவிதமாக நடந்ததாக எதியூரப்பா கூறினாலும் இதன் பின்னணியில் அரசியல் முக்கியத்துவம் இருப்பதாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications