For Daily Alerts
Just In
இலங்கை போரில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கதி என்ன? இணையத்தில் கையெழுத்து இயக்கம்
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான பேபி சுப்பிரமணியம், லாரன்ஸ் திலகர், புதுவை ரத்தினதுரை உளிட்டோரின் கதி என்ன என்பது குறித்து அறிவதற்காக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
புலிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் போரின் இறுதியில் சரணடைந்து அவர்கள் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டதை பார்த்திருக்கிறோம் என்று ஏற்கனவே இலங்கையின் விசாரணை கமிஷனிடம் பலரும் வாக்குமூலம் அளித்திருப்பதை முன்வைத்து தற்போது அவர்களின் கதி என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக, "http://www.avaaz.org/en/petition/Where_Is_Puthuvai_Ratnathurai/?ccWTJdb" என்ற இணையதளம் மூலமாக கையெழுத்தியக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.
Comments
English summary
Some movements launch online pettion campagin fro surrenderd ltte leaders like Baby subramaniyan, Puthuvai Rathinathurai etc..
Story first published: Wednesday, November 28, 2012, 9:49 [IST]