மதுரையில் போலி பெண் டாக்டர் கைது
மதுரை: மதுரையில் போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். வாடகை வண்டி ஓட்டுபவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள சந்தோஷம் (52) என்பவரது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இதற்காக ரூ 400 கட்டணமாக பெற்றுக் கொண்ட பெண் டாக்டர் சந்தோஷம் நோயாளி முருகனுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்துள்ளார். அதை அவர் உட்கொண்ட போதும் நோய் குறைந்தபாடு இல்லை.
இதனால் முருகன் அந்த டாக்டரிடம் மீண்டும் முறையிட்டுள்ளார். இதனால் டாக்டருக்கும், முருகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்து தெற்குவாசல் காவல் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் சந்தோஷம் போலி டாக்டர் என்பதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு வழக்குப் பதிவு செய்து சந்தோஷத்தை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications