என் ஆதரவாளர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுக்கட்டும், அப்புறம் இருக்கு வேடிக்கை: எதியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை பாஜகவில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் வரும் 9ம் தேதி கர்நாடக ஜனதா கட்சியை துவங்குகிறார். இந்நிலையில் எதியூரப்பா புது கட்சி துவங்கும் விழாவுக்கு செல்லும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து எதியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனது ஆதரவாளர்கள் மீது பாஜக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் பிறகு நான் கர்நாடக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டி இருக்கும். மேலும் சட்டசபையை கலைக்க வேண்டி இருக்கும் என்றார்.
இதற்கிடையே 12 தாலுகா பஞ்சாயத்து, 13 முனிசிபால் கவுன்சில், 4 ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஷிகாரிபூர் தாலுக்காவில் உள்ள அனைத்து கூட்டுறவு சடங்கங்களின் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி எதியூரப்பாவின் பக்கம் சென்றுவிட்டனர். மேலும் பாஜகவில் உள்ள அடிமட்ட உறுப்பினர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி எதியூரப்பாவிடம் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications