'பெரிய அண்ணன்' கர்நாடகம்.. காவிரி வழக்கில் நீதிபதி கருத்து
டெல்லி: காவிரி நீர் விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வைத்தியநாதனும், தர முடியாது என்று கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நரிமனும் வாதிட ஆரம்பித்தனர்.
அப்போது இடைமறித்த நீதிபதி ஜெயின், முதலில் 'பெரிய அண்ணன்' (கர்நாடகம்) சொல்லும் வாதத்தைக் கேட்போம் என்றார். இதற்கு பதிலளித்த வைத்தியநாதன், நீங்கள் குறிப்பிடும் 'பெரிய அண்ணன்' உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்பட யாருடைய உத்தரவுகளையும் மதிப்பதில்லை, நிறைவேற்றுவதில்லை என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி ஜெயின், கீழ் மாநிலங்களுக்குத் தண்ணீர் வழங்கும் இடத்தில் கர்நாடகத்தை கடவுள் வைத்திருக்கிறார். அவர்களிடமிருந்து தமிழகத்து ஏதாவது வாங்கித் தர முடியாதா என்று தான் நாங்கள் முயற்சிக்கிறோம் என்று சொல்லி வாதங்களைக் கேட்க ஆரம்பித்தார்.












Click it and Unblock the Notifications