பணம் இல்லாததால் மனைவியை வைத்து சூதாடித் தோற்ற நபர்

Subscribe to Oneindia Tamil

நொய்டா: உத்தர பிரதேச மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாடித் தோற்றவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள நேரு நகரைச் சேர்ந்த ஒருவர் சூதாடும் பழக்கம் உள்ளவர். அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூதாடும்போது பணையப் பொருளாக வைக்க எதுவுமில்லாததால் தனது மனைவியையே வைத்து விளையாடினார். அவரது நேரம் சூதாட்டத்தில் தோற்றார்.

இதையடுத்து சூதாட்டத்தில் வென்றவர்கள் அந்த நபரின் மனைவியை கடத்த அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அந்த பாவப்பட்ட பெண் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஓடினார். பின்னர் நொய்டாவை அடைந்த அவர் ஜார்சா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் கொடுத்தார். தன்னை வைத்து சூதாடிய கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் திருமணமான சில மாதங்களில் தனது கணவர் அவருடைய சகோதரருடன் உறவு வைக்குமாறு தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் மறுத்ததற்கு அடித்து உதைத்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனைவியை வைத்து சூதாடிவரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+