ஏழுமலையானுக்கு தங்க சங்கு காணிக்கை கொடுத்த ஜெயேந்திரர்:
திருமலை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், திருப்பதி ஏழுமலையானுக்கு 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கு ஒன்றை காணிக்கையாக கொடுத்துள்ளார்.
திருமலைக்கு திங்கட்கிழமை இரவு வந்த ஜெயேந்திரர், ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்பிரமணியத்திடம் 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சங்கை காணிக்கையாக வழங்கினார். பெற்றுக்கொண்ட செயல் அதிகாரி ஏழுமலையான் அபிஷேகத்தின் போது இது உபயோகபடுத்திக் கொள்வதாக கூறினார்.
வழக்கில் இருந்து விடுபடுவாரா?
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
வழக்கில் சாட்சிகளிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரின் வக்கீல்கள் வாதம் நவம்பர் 27ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமலை வெங்கடாசலபதியை தரிசனம் செய்து திரும்பியுள்ளார் ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications