கோத்தகிரி மலைப் பள்ளத்தாக்கில் உருண்ட பேருந்து- 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப்பள்ளத்தாக்கில் மினி பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கோத்தகிரியிலிருந்து கொட்டகம்பை பகுதிக்கு நேற்று இரவு தனியார் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கொட்டகம்பை அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்தத் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்துளனர்.
ஆபத்தான நிலையில் சிலர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவ இடத்தை காவல்துறை மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் பார்வையிட்டனர். படுகாயாடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications