சென்னை வந்த பிரணாப் முகர்ஜியை மு.க. ஸ்டாலின் வேண்டும் என்றே புறக்கணித்தாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்திக்காமல் புறக்கணித்ததன் பின்னணி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை வைர விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விமான நிலையத்தில் இறங்கியதும் நேராக சி.ஐ.டி. காலனியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரை டி.ஆர். பாலு, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் அங்கு முக ஸ்டாலினைக் காணவில்லை. இந்த சந்திப்பிற்கு பிறகு தான் சட்டசபை வைர விழாவுக்கே பிரணாப் சென்றார்.

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது திமுக தலைவர் கருணாநிதி அவருக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை முறையாக அழைக்காத சட்டசபை வைர விழாவுக்கு பிரணாபை வரவிடாமல் செய்ய நினைத்த திமுகவின் முயற்சி தோல்வி அடைந்தது. இருப்பினும் தங்களது செல்வாக்கை காட்ட பிரணாபை கருணாநிதி தனது வீட்டிற்கே வரவழைத்து சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதிலும் கோபாலபுரம் செல்லாமல் கனிமொழியின் வீட்டில் வைத்து பிரணாபை சந்தித்தார் கருணாநிதி. இந்நிலையில் கடந்த முறை பிரணாப் சென்னை வந்தபோது விமான நிலையத்தில் ஒரு மணிநேரம் காத்திருந்து அவரை சந்தித்த திமுக பொருளாளர் முக ஸ்டாலின் இம்முறை அவரை சந்திக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+