தொடர் கன மழை- 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil

தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக-ஆந்திர கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலை கொண்டிருக்கிறது. இதனால் நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.
சென்னையில் பல இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் மின்சார ரயில் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications