டாஸ்மாக் கடை முன்பு மக்கள் கூட்டம்.. பார்த்து அதிர்ந்து போன ஜெயலலிதா!

முன்பெல்லாம் தமிழகத்தில் வீதிக்கு வீதி கோவில்களைத்தான் கட்டுவார்கள். ஆனால் இப்போதோ அதை பீட் செய்யும் அளவுக்கு டாஸ்மாக் கடைகள் பெருக ஆரம்பித்துள்ளன. டாஸ்மாக் கடைகளின் பெருக்கத்தால் தமிழகத்தில் குடிகாரர்கள் எண்ணிக்கை பெருத்து பல்வேறு குற்றச் செயல்கள், மரணங்கள், வறுமை, ஏழ்மை அதிகரித்து விட்டதாக கடும் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் சாலையோரமாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளதாம். அதாவது மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூடப் போகிறார்களாம்.
நெடுஞ்சாலைகளில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு டிரைவர்கள் குடிபோதையில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குப் போய் நன்றாக குடித்து விட்டு பலர் வண்டி ஓட்டுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டே சாலைகளில் உள்ள கடைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளதாம்.
இந்த திடீர் முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்று கூறுகிறார்கள். அதாவது சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா சென்னை நீலாங்கரை சாலையில் சென்றபோது தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைகளில் வாகன ஓட்டிகள் பலர் நின்று கொண்டிருந்தனர்.
இப்படி மது குடிக்க திரண்டிருந்தவர்களைப் பார்த்து முதல்வர் அதிர்ந்து போனாராம். இவர்கள் இப்படி குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் எப்படி சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று யோசித்த அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டதாக டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது.
அம்மாவின் கண் திறந்து விட்டது.. படிப்படியாக மற்ற கடைகளையும் மூடி விட்டால் பெரும் நிம்மதியாக இருக்கும் என்று தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications