நிருபர்களிடம் சிரிச்சுக்கிட்டே பேசிய விஜயகாந்த்!

சில வாரங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தன்னிடம் கேள்வி கேட்ட நிருபர்கள் மீது பாய்ந்து குதறி விட்டார் விஜயகாந்த். நாயே என்று ஆரம்பித்து பலவாறாக திட்டித் தீர்த்தார் விஜயகாந்த். அவரது செயல் அரசியல்வாதிகளையே அதிருப்திக்குள்ளாக்கியது.
இந்தநிலையில் நேற்று கோவை வந்தார் விஜயகாந்த். கோவை மத்திய சிறைக்குப் போய் தனது கட்சி எம்.எல்.ஏ. பார்த்திபனை சந்தித்துப் பேசி விட்டு வெளியே வந்த விஜயகாந்த்தை வழக்கம் போல செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.
எப்படிக் கேள்வி கேட்டால் எப்படிப் பாய்வாரோ என்ற எதிர்பார்ப்புடன் செய்தியாளர்கள் இருந்த நிலையில் மிகப் பொறுமையாக பதில் சொன்னார் விஜயகாந்த். அதேபோல அவரது கட்சியினரும் தேவையில்லாமல் செய்தியாளர்களைத் தடுக்கவோ, நிறுத்தவோ முயலவில்லை.
வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அதில் ஒரு நிருபர் திமுகவுடன் கூட்டணி அமையுமா என்று கேட்டார். வழக்கமாக இதுபோன்ற கேள்விகளுக்கு டென்ஷனாக பதில் சொல்லும் விஜயகாந்த் நேற்று ரொம்ப வித்தியாசமாக, அமையலாம் சார். தேர்தலுக்கு இன்னும் ரொம்ப நாட்கள் உள்ளன. இப்போதே உங்களுக்கு எல்லாத்தையும் சொல்ல முடியுமா? இன்னைக்கே தெரிஞ்சுக்கணுமா என்று சிரித்தபடியே பேசினார்.
விஜயகாந்த் இப்படிச் சிரித்தபடியே பதில் சொன்னது செய்தியாளர்களுக்கும் சந்தோஷத்தைத் தர, நல்லவேளை தப்பா கிப்பா எதுவும் நடக்கலை போங்க என்று அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுடன் இடத்தைக் காலி செய்தனர்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications