சிறையில் ஆயுர்வேத மருந்து மூலிகைகளை வளர்க்கும் ஆந்திர கைதிகள்!
ஹைதராபாத்: ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான இமாலயா டிரக் நிறுவனம், தனது மருந்துகளுக்குத் தேவையான மூ்லிகை வளர்க்கும் பணியில் சிறைக் கைதிகளை ஈடுபடுத்தி வருகிறது. இதற்காக ஆந்திர மாநில சிறைத்துறையுடன் ஒப்பந்தம் போட்டு கைதிகளின் சேவையை அது பயன்படுத்தி வருகிறது.
சிறைக் கைதிகளுக்கான சீர்திருத்த முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆனந்தப்பூர் சிறைக் கண்காணிப்பாளர் லட்சுமிபதி கூறுகையில், ஆனந்தப்பூர் திறந்தவெளி சிறையில், கடந்த ஆகஸ்ட் முதல் மருத்துவ தாவரங்களை வளர்க்க ஆரம்பித்துள்ளோம். இமாலயா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.
முதலில் 2 ஏக்கர் நிலத்தில் மட்டும்தான் பயிரிட்டோம். ஆனால் தற்போது மேலும் நான்கு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 6 ஏக்கர் நிலத்திலும் தற்போது பயிர்கள் அறுவடைக்குத் தயாராகி விட்டன. இந்த நிலம் முழுவதும் சிறை வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது என்றார் அவர்.
நிலம், தண்ணீர் வசதி, மின்சாரம் போன்றவற்றை சிறை நிர்வாகம் வழங்கும். விதைகள், வளர்க்கும்முறை போன்ற தொழில்நுட்ப உதவிகளை இமாலாயா நிறுவனம் அளிக்கும்.
முதலில் கைதிகள் ஆல்பால்பா தாவரத்தைப் பயிரிட்டு வளர்த்தனர். இதில் முதல் அறுவடை முடிந்து விட்டது. தற்போது 2வது அறுவடைக்குப் பயிர்கள் தயாராகி வருகின்றனவாம்.
இந்த பயிர் வளர்க்கும் பணியில் 20 முதல் 25 கைதிகள் வரை ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு இதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம். இந்தப் பணியில் ஈடுபடும் கைதிகளுக்கு சம்பளமும் தரப்படுகிறது. ஒரு நாள் கூலி ரூ. 50 தரப்படுகிறதாம்.
அடுத்து துளசி, அலோ வேரா, ஜிம்னிமா உள்ளிட்ட பயிர்களையும் சிறை வளாகத்தில் பயிரிடும் திட்டத்தில் உள்ளதாம் சிறை நிர்வாகம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications