திருப்புவனம் நகைகடையில் 40 பவுன் நகை கொள்ளை

திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவில் பொன்மயில் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த ராமன் என்பவர் இந்த நகைகடையை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார் ராமன்.
இன்று காலையில் நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அருகில் இருந்தவர்கள் உரிமையாளர் ராமனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருப்புவனம் வந்த ராமன் போலீசில் புகார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்ததில் கடையில் 6 பூட்டுக்களை உடைத்து ஷட்டரை திறந்து கடையில் இருந்த 40 பவுன் நகை 4 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
கடந்த சில நாட்களாக நகைக்கடையின் அருகில் வெளி ஆட்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரதான வீதியில் இருந்த நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்புவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications