உலகின் உயரமான பெண் புற்றுநோயால் மரணம்
சூசெங்: உலகின் மிக உயரமான பெண்மணி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த யாவ் டெபன் (40) புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்.
கிழக்கு சீனாவில் உள்ள சூசெங்கில் 1972-ம் ஆண்டு பிறந்த இவர், பிட்யூட்டரி சுரபியின் அபார செயல்பாடு காரணமாக, தனது 15வது வயதில் 6 1/2 அடி உயரம் இருந்தார்.

தொடர்ந்து அவரது வளர்ச்சி, உச்சகட்ட உயரமான 7 அடி 8 அங்குலத்தை எட்டியது. உடல் எடையும் 200 கிலோவுக்கு மேல் அதிகரித்தது. உலகிலேயே மிக உயரமான பெண்ணாக இவரை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகம் சான்றிதழ் வழங்கியது.
பின்னர் 2006-ம் ஆண்டு, ஷங்காய் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் நடந்த அறுவை சிகிச்சையில், இவரது தலையில் இருந்த புற்றுக்கட்டி அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு அவரது உயரத்திலோ, எடையிலோ வளர்ச்சி ஏதும் உண்டாகவில்லை. எனினும் மறுபடியும் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இம்முறை எலும்பு புற்றுநோய் அவரை தாக்கியது.
இந்நிலையில் சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், எலும்பு புற்று நோயும் சேர்ந்து அவரை அதிகமாக சோதித்ததில் கடந்த மாதம் அவர் சூசெங் நகரில் உள்ள பூர்வீக வீட்டில் மரணமடைந்தார்.
மரணம் குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாங் கூறியதாவது:
நவம்பர் 13ம் தேதி காலை 9 மணி இருக்கும் அப்போதுதான் யாவ் டெபன் காலை உணவு சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவளுடைய அம்மா அவளை எழுப்பும் போது அவள் தனது மூச்சை நிறுத்தியிருந்தாள் என்று கூறியுள்ளார். இந்த தகவலை சீனாவில் உள்ள அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications