போராட்டம் நீடிப்பு! கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சங்கம்

Subscribe to Oneindia Tamil

Lorry
மண்டியா: தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட்ட கர்நாடகா அரசுக்கு எதிராக போராட்டம் நீடித்து வருவதால் தமிழக லாரிகள் கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. கர்நாடகாவில் போராட்டம் நீடிப்பதால் இன்று 2-வது நாளாக வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீரை திறந்துவிட்டதைக் கண்டித்து மண்டியா மாவட்டத்தில் கன்னட அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று போல் இன்றும் அப்பகுதியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்ததால் அணையைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கபப்ட்டிருக்கின்றனர். இதனால் மைசூர் மற்றும் மண்டியா பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

கர்நாடாகா அரசின் முடிவைக் கண்டித்து இன்று முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருக்கிறார்.

2-வது நாளாக வாகனங்கள் நிறுத்தம்

இதனிடையே கர்நாடகாவில் தொடரும் போராட்டங்களால் ஈரோடு மாவட்டத்திலிருந்து திம்மம் மலைப்பாதை வழியாகவும் சேலம், மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைப்பாதை வழியாகவும் நீலகிரி மாவட்டம் ஊட்டி வழியாகவும் செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் 2-வது நாளாக எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலை, மைசூர், கொள்ளேகால், போன்ற பகுதிகளுக்கு மேட்டூரில் இருந்து கொளத்தூர், கோவிந்தப்பாடி, பாலாறு வழியாக இயக்கப்பட்டு வந்த தமிழக பேருந்துகள் இன்றும் இயக்கப்படவில்லை. தமிழ அரசு பேருந்துகள் மாதேஸ்வரன் மலை வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ஓசூர் வழியாக தமிழகத்திலிருந்து பேருந்துகளும் வாகனங்களும் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.

லாரி உரிமையார்கள் சங்கம் வேண்டுகோள்

இதனிடையே தமிழக லாரிகள் கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் லாரிகள் கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம் என்று அந்த சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து எல்லைகளில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+