தாமதமாக காவிரி நீர் திறப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் புகார்! கர்நாடகா வருத்தம்!
Subscribe to Oneindia Tamil

காவிரி நதிநீர் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, கர்நாடகா தாமதமாக நீர் திறந்துவிட்டதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தாமதமாக நீர் திறந்துவிட்டதற்கு கர்நாடகா அரசு தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைவரை தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தாமதமாக நீர் திறந்ததால் திங்கள்கிழமை வரை தமிழகத்துக்கு நீர் தர கர்நாடகா உறுதி அளித்தது.












Click it and Unblock the Notifications