கர்நாடகா: எதியூரப்பாவின் புதிய கட்சி நாளை உதயம்! பாஜக ஆட்சி கவிழும் அபாயம்!

Subscribe to Oneindia Tamil

Yeddyurappa
பெங்களூர்: கர்நாடகா மாநில அரசியல் வரலாற்றில் நாளை புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இந்த புதிய அத்தியாயம்தான் தென்னிந்தியாவின் முதலாவது 'பாஜக' ஆட்சி என போற்றப்படும் கர்நாடக பாஜக அரசுக்கு இறுதி அத்தியாயமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கர்நாடக மாநில பாஜகவின் நம்பிக்கைத் தூணாக இருந்தவர் எதியூரப்பா. ஆனால் அவர் சுரங்க முறைகேடு புகாரில் சிக்கி சிறைக்குப் போன பிறகு எல்லாமே தலைகீழாகிப் போனது. பெரும் போராட்டத்துக்குப் பின்னர் தமது ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கியும் பார்த்தார். ஆனாலும் அவரை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவரை புறக்கணித்தே வந்தது.

இதனால் வெறுத்துப் போன எதியூரப்பா, பாஜகவுடனான 40 ஆண்டுகால உறவை துண்டித்துவிட்டு கர்நாடக ஜனதா கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.இந்தக் கட்சியை நாளை முறைப்படி தொடங்க இருக்கிறார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தமது எம்.எல்.ஏக்களும் நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. எதியூரப்பாவின் நாளை கட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாஜக கூறியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பாஜகவுக்கு 119 எம்.எல்.ஏக்களும் 44 எம்.எல்.சிகளும் இருக்கின்றனர்.

எதியூரப்பாவோ தமக்கு 40 எம்.எல்.ஏக்கள் மற்றும் 34 அமைச்சர்களில் 12 பேர் ஆதரவு இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்.

இருப்பினும் இதுவரை 5 எம்.எல்.ஏக்கள், 4 எம்.எல்.சிகள், 3 எம்.பிக்கள் பகிரங்கமாக எதியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இவர்களில் ஒருவர் எதியூரப்பாவின் மகன் ராகவேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாஜகவுக்கு பீதியூட்டும் வகையில் நேற்று பெல்காம் சட்டசபைக்கு போன எதியூரப்பா, சபாநாயகர் அறையிலேயே தமது ஆதரவாளர்களை அழைத்துப் பேசி அசரவைத்திருக்கிறார். நேற்று காலை அவர் கொடுத்த விருந்தில் சுமார் 40 எம்.எல்.ஏக்கள், 10 எம்.பிக்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் நாளை ஹவேரியில் தமது கட்சியின் தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார் எதியூரப்பா. தமக்கு ஆதரவாக லட்சக்கணக்கானோர் திரள்வர் என்று எதியூரப்பா எதிர்பார்க்கின்றார்.

எப்படியும் கணிசமான எம்.எல்.ஏக்கள், எதியூரப்பாவை ஆதரித்து கட்சி தாவக் கூடும் என்பதால் நேற்று பாஜக தலைவர் நிதின் கத்காரியுடன் கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வியூகம் வகுத்திருக்கின்றனர். எதியூரப்பாவுடன் கணிசமான எம்.எல்.ஏக்கள் வெளியேறினால் ஆட்சி கவிழும் அபாயமும் இருப்பதால் பாஜக மேலிடம் நாளைய நாளை நினைத்து கலங்கிப் போய்க் கிடக்க்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+