பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக, சமாஜ்வாடி இணைந்து முடக்க சதி: மாயாவதி்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் சிக்கிக் கொண்ட மத்திய அரசை காப்பாற்றிய கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமெனில் பதவிஉயர்வில் இடஒதுக்கீடு கோரும் மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற பேரத்தை மாயாவதி முன்வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
இதற்காகவே இன்று ராஜ்யசபாவில் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை இணை அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆனால் சமாஜ்வாடி கட்சியின் கடுமையான எதிர்ப்பினால் ராஜ்யசபா முடங்கிப் போனது.
இதனால் செம கடுப்பில் இருக்கும் மாயாவதி, நாங்கள் காத்திருக்கிறோம்..அரசு இந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மிகக் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள நேரிடும்.. நாங்கள் எந்த ஒரு முடிவையும் மேற்கொள்வோம் என்று மிரட்டியிருக்கிறார்.
இந்த மசோதாவை முடக்கிப் போடுவதில் பாஜகவும் சமாஜ்வாடியும் கூட்டாக இணைந்து சதி செய்வதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
மாயாவதியின் மிரட்டலால் ஆடிப் போய் இருக்கும் மத்திய அரசு, சமாஜ்வாடி கட்சியையும் எதிர்க்க முடியாமல் தத்தளிக்கிறது.












Click it and Unblock the Notifications