மதுரை ஆதீனத்தில் 'முதல் தம்பிரான்'- ஏன்?: அருணகிரிநாதர் விளக்கம்
மதுரை: மதுரை ஆதீனத்தில் முதல் முறையாக தம்பிரான் பொறுப்புக்கு திருச்சிற்றம்பலம் என்பவரை ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் திருச்சிற்றம்பலம். இவர் சைவ வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பினராக இருந்தார். அண்மையில் திருவாவடுதுறை 23-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பரிபூரணமடைந்தார்( காலமானார்). இதைத் தொடர்ந்து 24-வது ஆதீனம் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனாலும் 23-வது ஆதீனத்தின் மறைவால் வேதனையில் இருந்தார் திருச்சிற்றம்பலம். இதனால் தம்மை தம்பிரானா ஏற்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை தம்பிரானாக நியமித்திருக்கிறேன். இது இளைய ஆதீனம் பொறுப்பு அல்ல என்றார் அவர்.
இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்து பெரும் களேபரத்துக்கு வழிவகுத்திருந்தார் அருணகிரிநாதர். இப்பொழுது தம்பிரான் போஸ்ட்டை உருவாக்கியிருக்கிறார்.
இன்னும் எத்தனை நாளுக்கு இந்த தம்பிரான் பொறுப்போ!












Click it and Unblock the Notifications