24 மணி நேரமும் சுறுசுறுப்பாக செயல்படும் மோடியின் 'போர்ப்படைத் தளபதிகள்'-117 சீட்களுக்கு குறி!

அருண்ஜேட்லி உள்ளிட்டோர் அடங்கிய மோடி குழுவினர் இதற்கான தீவிரப் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் வீட்டில் வைத்து ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மொத்தம் உள்ள 182 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு நிலவரம் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாம்.
குஜராத் தேர்தல் முடிவுகள் தாங்கள் நினைத்தபடி இருந்தால் 117 தொகுதிகளை கண்டிப்பாக பிடித்து விடலாம் என்று பாஜக தலைவர்கள் கருதுகிறார்களாம். மேலும் இந்தத் தேர்தல் முடிவுகள் அப்படியே லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும் என்ற வேகத்திலும் பாஜக உள்ளதாம். எனவேதான் குஜராத் தேர்தல் குறித்து தீவிரம் காட்டி வருகிறார்கள் பாஜக தலைவர்கள்.
பிரசார நேரம் போக முதல்வர் மோடி எப்போதெல்லாம் அகமதாபாத் திரும்புகிறாரோ அப்போதெல்லாம் இந்த தலைவர்கள் மோடியின் வீட்டில் கூடி ஆலோசனையில் குதித்து விடுகின்றனர். இவர்களின் ஆலோசனையில் குறிப்பாக சவுராஷ்டிரா பகுதி குறித்துத்தான் தீவிர அக்கறையும், கவனமும் காட்டப்படுகிறதாம்.
முதல்வரின் வீடு மட்டுமல்லாமல் மாநில கட்சித் தலைமையகம், அருண்ஜேட்லி தங்கியுள்ள பிளாட் ஆகியவற்றிலும் தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் இப்போது 2 தேர்தல்களை சந்திக்கிறோம். சவுராஷ்டிராவை தனி தேர்தலாகவே நாங்கள் பார்க்கிறோம். மற்ற பகுதிகளை ஒரு தேர்தலைக சந்தித்து அணுகியுள்ளோம் என்றார்.
பாஜக தலைவர்களின் முக்கியக் கவலையே கேசுபாய் படேல்தான். முன்னாள் முதல்வரான இவர் பாஜகவிலிருந்து பிரிந்து குஜராத் பரிவர்த்தன் கட்சியைத் தொடங்கியுள்ளார். இவர் பக்கம் படேல் சமுதாயத்தினர் போய் விடுவார்களோ என்ற பயத்தில் குஜராத் பாஜக உள்ளது. கடந்த 17 வருடமாக படேல்கள்தான் குஜராத் பாஜகவைத் தாங்கிப் பிடித்து நிற்கிறார்கள். எனவே கேஷுபாய் படேலால் பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சம் மோடிக்கே உள்ளதாம்.
இதுகுறித்தெல்லாம் ஜேட்லி தலைமையிலான குழுவினர் தீவிர ஆய்வுகள், ஆலோசனைகளில் உள்ளனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள முக்கிய நபர் அமீத் ஷா ஆவார்.
182 தொகுதி நிலவரங்களையும் உடனுக்குடன் அறிய இன்டர்நெட் வசதியுடன் கூடிய வசதிகளையும் இந்தக் குழுவினருக்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் மோடி. இமெயில்கள் மூலம் அனைத்துத் தகவல்களையும் பரிமாறிக் கொள்கின்றனராம். ஒவ்வொரு தொகுதியிலும் 5 பேர் கொண்ட குழுவை இதற்காக ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள்தான் தகவல்களை மெயிலில் அனுப்புவதும், மேலிடம் கேட்கும் சந்தேகங்களை விளக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேஷுபாய் படேல், காங்கிரஸ் தலைவர்களின் உத்திகள், பிரசாரங்கள், கூட்டங்கள் குறித்த தகவல்களையும் கண்காணித்து உடனுக்குடன் இவர்கள் அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கின்றனராம்.
24 மணி நேரமும் இந்த போர் அறை செயல்பாட்டில் உள்ளது. காலை 5 மணிக்கு தனது முதல் ஆய்வை ஆலோசனையை நடத்தி விடுகிறார் மோடி. அதன் பின்னர் எதை இன்று டிவிட் செய்வது என்பது குறித்தும் ஆலோசித்து அதையும் செய்து விடுகிறார். பிறகு 8 மணிக்கு ஜெட்லியுடன் தொலைபேசியில் ஒரு ஆலோசனை நடத்துகிறார். பின்னர் தனது பிற தேர்தல் பணிகளைத் தொடங்குகிறார்.
மோடி மற்றும் ஜேட்லி ஆகியோரது தலைமையில் சட்டசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவினரின் செயல்பாடுகளே கூட குஜராத்தில் இன்று ஒரு பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications