Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

24 மணி நேரமும் சுறுசுறுப்பாக செயல்படும் மோடியின் 'போர்ப்படைத் தளபதிகள்'-117 சீட்களுக்கு குறி!

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
அகமதாபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு 13ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு இன்று பிரசாரம் ஓய்வுக்கு வருகிறது. இந்த நிலையில் குஜராத் தேர்தலில் 117 தொகுதிகளைப் பிடித்து விட வேண்டும் என்ற தீவிரத்தில் பாஜக தலைமை உள்ளதாம்.

அருண்ஜேட்லி உள்ளிட்டோர் அடங்கிய மோடி குழுவினர் இதற்கான தீவிரப் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் வீட்டில் வைத்து ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மொத்தம் உள்ள 182 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு நிலவரம் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாம்.

குஜராத் தேர்தல் முடிவுகள் தாங்கள் நினைத்தபடி இருந்தால் 117 தொகுதிகளை கண்டிப்பாக பிடித்து விடலாம் என்று பாஜக தலைவர்கள் கருதுகிறார்களாம். மேலும் இந்தத் தேர்தல் முடிவுகள் அப்படியே லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும் என்ற வேகத்திலும் பாஜக உள்ளதாம். எனவேதான் குஜராத் தேர்தல் குறித்து தீவிரம் காட்டி வருகிறார்கள் பாஜக தலைவர்கள்.

பிரசார நேரம் போக முதல்வர் மோடி எப்போதெல்லாம் அகமதாபாத் திரும்புகிறாரோ அப்போதெல்லாம் இந்த தலைவர்கள் மோடியின் வீட்டில் கூடி ஆலோசனையில் குதித்து விடுகின்றனர். இவர்களின் ஆலோசனையில் குறிப்பாக சவுராஷ்டிரா பகுதி குறித்துத்தான் தீவிர அக்கறையும், கவனமும் காட்டப்படுகிறதாம்.

முதல்வரின் வீடு மட்டுமல்லாமல் மாநில கட்சித் தலைமையகம், அருண்ஜேட்லி தங்கியுள்ள பிளாட் ஆகியவற்றிலும் தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் இப்போது 2 தேர்தல்களை சந்திக்கிறோம். சவுராஷ்டிராவை தனி தேர்தலாகவே நாங்கள் பார்க்கிறோம். மற்ற பகுதிகளை ஒரு தேர்தலைக சந்தித்து அணுகியுள்ளோம் என்றார்.

பாஜக தலைவர்களின் முக்கியக் கவலையே கேசுபாய் படேல்தான். முன்னாள் முதல்வரான இவர் பாஜகவிலிருந்து பிரிந்து குஜராத் பரிவர்த்தன் கட்சியைத் தொடங்கியுள்ளார். இவர் பக்கம் படேல் சமுதாயத்தினர் போய் விடுவார்களோ என்ற பயத்தில் குஜராத் பாஜக உள்ளது. கடந்த 17 வருடமாக படேல்கள்தான் குஜராத் பாஜகவைத் தாங்கிப் பிடித்து நிற்கிறார்கள். எனவே கேஷுபாய் படேலால் பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சம் மோடிக்கே உள்ளதாம்.

இதுகுறித்தெல்லாம் ஜேட்லி தலைமையிலான குழுவினர் தீவிர ஆய்வுகள், ஆலோசனைகளில் உள்ளனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள முக்கிய நபர் அமீத் ஷா ஆவார்.

182 தொகுதி நிலவரங்களையும் உடனுக்குடன் அறிய இன்டர்நெட் வசதியுடன் கூடிய வசதிகளையும் இந்தக் குழுவினருக்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் மோடி. இமெயில்கள் மூலம் அனைத்துத் தகவல்களையும் பரிமாறிக் கொள்கின்றனராம். ஒவ்வொரு தொகுதியிலும் 5 பேர் கொண்ட குழுவை இதற்காக ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள்தான் தகவல்களை மெயிலில் அனுப்புவதும், மேலிடம் கேட்கும் சந்தேகங்களை விளக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேஷுபாய் படேல், காங்கிரஸ் தலைவர்களின் உத்திகள், பிரசாரங்கள், கூட்டங்கள் குறித்த தகவல்களையும் கண்காணித்து உடனுக்குடன் இவர்கள் அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கின்றனராம்.

24 மணி நேரமும் இந்த போர் அறை செயல்பாட்டில் உள்ளது. காலை 5 மணிக்கு தனது முதல் ஆய்வை ஆலோசனையை நடத்தி விடுகிறார் மோடி. அதன் பின்னர் எதை இன்று டிவிட் செய்வது என்பது குறித்தும் ஆலோசித்து அதையும் செய்து விடுகிறார். பிறகு 8 மணிக்கு ஜெட்லியுடன் தொலைபேசியில் ஒரு ஆலோசனை நடத்துகிறார். பின்னர் தனது பிற தேர்தல் பணிகளைத் தொடங்குகிறார்.

மோடி மற்றும் ஜேட்லி ஆகியோரது தலைமையில் சட்டசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவினரின் செயல்பாடுகளே கூட குஜராத்தில் இன்று ஒரு பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+