12 மணியான்னா என்ன ஓடிப்போயிடுறீங்க? அன்சாரியை விளாசிய மாயா

வேலைவாய்ப்பில் தலித் மக்களுக்கு முன்னுரிமை கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தார்.
தொடர்ந்து வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தியபோது அதற்கு சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து 3 நாட்களுக்குள் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசு அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நேற்று முன்தினம் மாயாவதி தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக தினமும் கூச்சல், குழப்பமுமாக இருப்பதால் சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி கடந்த 2 நாட்களாக மதிய வேளையில் அவைக்கு வரவில்லை. இதையடுத்து இன்று காலை அவைக்கு வந்த அவரை மாயாவதி விலாசித் தள்ளிவிட்டார்.
அன்சாரியைத் தாக்கி மாயாவதி கூறுகையில்,
நான் எதையும் கவனிக்கத் தயாராக இல்லை. கடந்த சில நாட்களாக நண்பகல் 12 மணிக்கு மேல் அவையை நடத்தவிடுவதில்லை. அவையை ஒழுங்காக நடத்துவது உங்கள் கடமை. நண்பகல் 12 மணிக்கு மேல் உங்களை இங்கே பார்க்கவே முடியவில்லை. என்ன மாதிரி ஒரு அவை இது. அவை ஒழுங்காக நடக்க நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உச்ச கட்டத்தில் கத்திய மாயாவதியை பாவம் போல் பார்த்துக் கொண்டிருந்தார் அன்சாரி.
அரசு வேலைவாயப்பில் தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கும் விவகாரம் தொடர்பாக இந்த வாரம் முழுவதும் ராஜ்யசபாவில் அமளியாக உள்ளதால் அவை முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த விவாகரம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications