பெண்களை வலையில் வீழ்த்தி படம் பிடித்து ரசிக்கிறார்... கணவர் மீது மனைவி போலீஸில் புகார்
சென்னை: எனது கணவர் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து அதை தனது செல்போனில் வைத்துப் பார்த்து ரசிக்கிறார் என்று கூறி மனைவி ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. 32 வயதான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 1998ம் ஆண்டு எனது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த பிரபுவை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 14 வயதில் புவனேஸ்வரன் என்ற மகனும், 12 வயதில் திணேஷ் குமார் என்ற மகனும் உள்ளனர்.
எனது கணவர் ஒரு பெண் பித்தர். எனக்குத் திருமணமாவதற்கு முன்பே அவருக்கு பல பெண்களுடன் உறவு இருந்தது. எனது தோழி சுசித்ராவுடன் நெருக்கமாக பழகி வந்தார்.அவர் மூலம் அறிமுகமான ஸ்ரீதேவி என்ற நர்ஸுடனும் தொடுப்பு இருந்தது. இதில் ஸ்ரீதேவியுடன் மிகவும் நெருக்கமாக பழகி அவர் மூலம் 2 குழந்தைகளையும் அவர் கொடுத்துள்ளார்.
இவரது பழக்க வழக்கம் பிடிக்காததால் 2009ம் ஆண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனேன். ஆனால் என்னை மிகவும் கெஞ்சி வழக்கை வாபஸ் பெற வைத்து விட்டார். நானும், பிள்ளைகள் நலனுக்காக மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்தேன்.
ஆனால் அவரது காமலீலைகள் நிற்கவில்லை. தொடர்ந்து பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். அவரது செல்போனை தற்செயலாக எடுத்துப் பார்த்தபோது அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தன. அதுகுறித்துக் கேட்டால், இவர்களுடன் எனக்குப் பழக்கம் உள்ளது. இவர்களது ஆபாசப் படங்களைப் பார்க்காமல் எனக்குத் தூக்கம் வராது என்று பச்சையாக கூறுகிறார்.
எனது கணவர் திருந்துவது போலத் தெரியவில்லை. என்னை மட்டுமல்லாமல், என்னைப் போல பல பெண்களின் வாழ்க்கையை அவர் சூறையாடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் காமாட்சி.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications