சர்ச்சைக்குரிய தீவில் சீனாவுக்கு போட்டியாக ஜப்பானும் போர் விமானங்களை களமிறக்கியது
டோக்கியோ: கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தியாவ்யூ தீவுப் பகுதியில் சீனாவின் போர் விமானம் இறங்கியதைத் தொடர்ந்து ஜப்பானும் எப்.15 ரக போர் விமானங்களை அப்பகுதியில் இறக்கியிருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது.
தியாவ்யூ தீவு, இயற்கை எரிவாயு வளம் மிக்கது. இத்தீவுக்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த நிலையில் தீவை உரிமையாளரிடமிருந்து விலைபேசி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது ஜப்பான். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
மேலும் அப்பகுதிக்கு தமது ரோந்து கப்பல்களையும் அனுப்பி வந்தது. தற்போதும் அப்பகுதியில் கண்காணிப்பு கப்பல்களை சீனா நிறுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தியாவ்யூ தீவு அருகே சீனாவின் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஜப்பான், போட்டியாக எப்.15 ரக போர் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இதனால் கிழக்கு சீனக் கடற்பரப்பில் யுத்தம் வெடிக்கும் அபாயம் உருவெடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications