குஜராத் தேர்தல் முடிந்த்து - 65 சதவீதத்திற்கும் மேலான வாக்குப்பதிவு

இன்று மொத்தம் 95 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் மோடி போட்டியிடும் மணிநகர் தொகுதியும் அடக்கமாகும். இன்றைய வாக்குப் பதிவுடன் தேர்தல் முடிவடைந்தது. 20ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
காலை முதலே அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பானவாக்குப் பதிவு காணப்பட்டது. மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலையிலேயே முதல்வர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் பாஜக வெற்றி பெறும், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று செய்தியாளர்களிடம் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதேபோல பாஜக மூத்த தலைவர் அத்வானி ஷாபூர் என்ற இடத்தில் ஓட்டுப் போட்டார். அதேபோல மூத்த தலைவர் அருண் ஜேட்லியும் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
முன்னதாக கடந்த 13ம் தேதி முதல் கட்டமாக 87 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் வரலாறு காணாத வகையில் 70.7 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்தது என்பது நினைவிருக்கலாம். இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் 92, கேசுபாய் படேலின் கட்சி 84 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தோராயமாக 65 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான விவரம் தெரிய சில மணி நேரங்களாகும்.












Click it and Unblock the Notifications