தாவூத் இப்ராஹிமுக்கு நுழைவு பாஸ்! இது மகாராஷ்டிரா கூத்து

நாக்பூரில் உள்ள விதான் பவனில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு நுழைவு அடையாள அட்டை வழங்கப்படுவது வழக்கம். இப்படி செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவு பாஸ் ஒன்றில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம் படம் ஒட்டப்பட்டு அதில், சட்டப்பேரவை முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ம் தேதியன்று விநியோகிக்கப்பட்ட 2246 எண் கொண்ட இந்த நுழைவு பாஸில் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் கையொப்பமும் உள்ளது.
இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சட்டப்பேரவை பாதுகாப்பில் துளியும் கவனம் செலுத்தாமல், நுழைவு பாஸ் கேட்ட செய்தியாளர் பற்றி எதுவும் விசாரிக்காமல் இந்த பாஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.
இச்சம்பவம் சட்டப்பேரவை அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications