Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று பாமகவின் பூட்டு போராட்டம்... விடிய விடிய கடைகளிலேயே தங்க வைக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவின் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் இன்று நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக பல பாமகவினரை நேற்றே போலீஸார் கைது செய்தனர். மேலும், கடை ஊழியர்களையும் நேற்று இரவே கடைகளில் தங்க வைத்தனர் போலீஸார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகளுக்கு இன்று பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 823 மதுக்கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு ரோந்து போலீசாரையும் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து செல்லும்படி உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக நேற்று இரவு கடை வர்த்தகம் முடிந்ததும் கடைகளிலேயே ஊழியர்களைத் தங்க வைத்தனர் போலீஸார். இதற்கு ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இரவில் வந்து பாமகவினரோ அல்லது சமூக விரோதிகளோ தாக்குதல் நடத்தினால் யார் பொறுப்பு ஏற்பது என்று அவர்கள் புலம்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+