கொலை மிரட்டல் விடுத்தனர் கலாநிதி உட்பட 4 சன் டிவி நிர்வாகிகள்: சக்சேனா, அய்யப்பன் புகார்!
சென்னை: கொலை மிரட்டல் விடுத்ததாக சன் குழுமத்தின் கலாநிதி மாறன் உட்பட 4 பேர் மீது முன்னாள் சன் பிக்சர்சின் பணியாளர்கள் சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் இன்று புகார் மனு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் கூறுகையில்,
நாங்கள் சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் செம்பியன், தினகரன் பதிப்பாளர் ஆர்.எம்.ரமேஷ், கண்ணன் ஆகியோரை சந்தித்து உங்களுக்காகத்தான் நாங்கள் சிறைக்குப் போனாம். விநியோகஸ்தர்களுக்கு தர வேண்டிய ரூ.24 கோடியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றோம். ஆனால் நான்கு பேரும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
நாங்கள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தோம். கலாநிதிமாறன் குரூப் செய்த குற்றத்திற்கு என் மீது பழி விழுந்தது. நான் சிறையில் இருந்தபோது, என் மனைவியை மிரட்டி நடக்காததையெல்லாம் நடந்ததாக எழுதி வாங்கினார் ஆர்.எம்.ரமேஷ். அவர்கள் செய்த தவறுகளை நேருக்கு நேர் விவாதம் செய்ய நான் ரெடி. கலாநிதி மாறன் தரப்பு ரெடியா?
இதைக் கேட்டதற்கு கூலிப்படையை வைத்து மிரட்டுகின்றனர். எங்கள் உயிரே போனாலும் நியாயம் கிடைக்க வேண்டும்! இதனால்தான் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம் என்றனர்!












Click it and Unblock the Notifications