மதுக்கடையை மூட மறுத்ததால் 'பெட்ரோல் குண்டு' வீசிய பாமக பிரமுகர் கைது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பாமக பிரமுகர் பெரியண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பாமகவினரின் மதுக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையொட்டி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பாமகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு திருவண்ணாமலை அருகே நூக்கம்பாடி டாஸ்மாக் கடைக்குப் போன பாமக பிரமுகர் பெரியண்ணன் கடையை மூடக் கூறியிருக்கிறார்.
ஆனால் விற்பனையால் ரமேஷ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பெரியண்ண்ணனுக்கும் ரமேஷுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது பாமகவின் பெரியண்ணன் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டை வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மதுக்கடை பற்றி எரிந்தது. அருகே இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்திருக்கின்றனர். இது தொடர்பாக மங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் பெரியண்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications