என் பவரை எல்லாம் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடுகளுக்கு ஒரு முடிவு கட்டுவேன்: ஒபாமா

அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிகட் என்ற இடத்தில் உள்ள சாண்டி ஹுக் துவக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான 20 குழந்தைகளின் பெற்றோரை அதிபர் ஒபாமா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த துப்பகாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
இது போன்ற துயர சம்பவங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அவற்றை முடிவுக்கு கொண்டு வர நாம் மாற வேண்டும். இந்த துயரச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் உள்ளனர். உங்கள் துயரம் இந்த உலகத்தையும் தாக்கியுள்ளது. நாங்களும் உங்களின் இழப்புக்காக கண்ணீர் சிந்தினோம்.
நியூடவுன் நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் அனைவரும் இருக்கிறோம். நான் அதிபரான பிறகு இதுபோன்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வது இது நான்காவது முறையாகும். மேலும் நாடு முழுவதும் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருக்கிறது. இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க எனக்குள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என்றார்.












Click it and Unblock the Notifications