பெயிலாக்கியதால் ஆத்திரம்! ஆசிரியர்களை விடிய விடிய சிறை வைத்த மாணவிகள்!
கொல்கத்தா:கொல்கத்தாவில் தேர்வில் பெயிலாக்கியதால் ஆத்திரமடைந்த 29 மாணவிகள் தலைமை ஆசிரியை உட்பட ஆசிரியைகளை 21 மணி நேரம் சிறை பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு கொல்கத்தாவில் ரிஷி அரவிந்த் பாலிகா வித்யாலயா என்ற பள்ளியில் பிளஸ் டூ மாணவிகளுக்கு பொதுத்தேர்வுக்கு முந்தைய மாதிரி தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 105 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 76 பேர் பாஸாகிவிட்டனர். 29 மாணவிகள் 2க்கும் மேற்பட்ட பாடங்களில் பெயிலாகிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகள் நேற்று மாலை 3 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் தங்களுக்கு வகுப்பு ஆசிரியைகளை ஒரு அறையில் பூட்டி சிறை வைத்துவிட்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியையோ கல்வி அமைச்சர் தொடங்கி பல அதிகாரிகளுக்கும் போன் செய்து பார்த்தும் எந்தப் பயனும் இல்லை. இரவு நேரமாகிவிட்டது. ஆனால் மாணவிகள் விடுவதாக இல்லை. சில மாணவிகளின் பெற்றோரும் இதில் இணைந்து கொண்டனர். இரவில் அங்கு போலீஸ் வந்தும் எந்தப் பயனும் இல்லை. விடிய விடிய தலைமை ஆசிரியை உட்பட ஆசிரியையகள் பள்ளியிலேயே சிறை வைக்கப்பட்டனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் உயர் கல்வித் துறை செயலாளர் அசிந்தியா பால் நேரில் வந்து மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகள் தரப்பில், தங்களுக்கு வேண்டுமென்றே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு பெயிலாக்கிவிட்டனர் என்று புகார் கூறினர். இதைத் தொடர்ந்து 29 மாணவிகளினது தேர்வுத் தாள்கள் அனைத்தும் திருப்பி மதிப்பீடு செய்வதாக உயர்கல்வித் துறை செயலர் அசிந்தியா பால் கூறியதால் தங்களது சிறைபிடிப்பு போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர். சுமார் 21 மணி நேர சிறை வைப்புக்குப் பிறகு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியையகளை மாணவிகள் விடுவித்தனர்.
இத்துடன் இந்தப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. 10-ம் வகுப்பு மாணவிகள் சிலரும் தங்களையும் பெயிலாக்கிவிட்ட ஆசிரியைகளை சிறைபிடிக்கும் முடிவில் இருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications