நெல்லையில் கார் ஏற்றி வக்கீலை கொல்ல முயற்சி: வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
நெல்லை: நெல்லை அருகே நிலமோசடி குறித்து புகார் செய்த வழக்கறிஞர் உட்பட 2 பேரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவத்தை கண்டித்து இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நெல்லையை அடுத்த ராஜபதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கிருஷ்ணன் (38). அவரும் அணைத்தலையூரைச் சேர்ந்த பரமசிவன் என்பவரும் கடந்த 11ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் பைக்கின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி கார் டிரைவர் சீதாராமனை(27) கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கங்கைகொண்டான் அருகே பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 7 பேர் மோசடி செய்தது குறித்து கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்தவர்கள் அவரை கார் ஏற்றி கொல்ல முயன்றது தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆயிரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கிருஷ்ணனை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் இன்று நெல்லையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்தனர் .இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications