மஞ்சள் மழையைத் தொடர்ந்து நில அதிர்வு- விருத்தாசலத்தில் தொடர் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விருத்தகிரிகுப்பத்தில் மஞ்சள் மழை பெய்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் நில அதிர்வும் உணரப்பட்டிருக்கிறது.
விருத்தாசலம் -கடலூர் சாலையில் மக்புல் காலனியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று காலை 10 மணியளவில் திடீரென இப்பகுதியில் நில அதிர்வை உணர்ந்திருக்கின்றனர்.
வீட்டு சமையல் அறையில் இருந்து பாத்திரங்கள் உருண்டோடியதால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். வீடுகளின் சுவர்களில் லேசான விரிசல்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மஞ்சள் மழையைத் தொடர்ந்து நில அதிர்வும் உருவானதால் அப்பகுதி பரபரப்புக்குள்ளானது.












Click it and Unblock the Notifications