என்.டி.ராமராவ் வாழ்ந்த வீடு இடிப்பு...லட்சுமி சிவ பார்வதி கண்ணீர்
ஹைதராபாத்: ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருந்த என்.டி.ராமாராவ் வீடு வணிக வளாகம் கட்டுவதற்காக இடிக்கப்படுகிறது. ஆனால் ராமராவின் நினைவுகள் அழிக்கப்படுவதாக அவரது இரண்டாவது மனைவி லட்சுமி சிவ பார்வதி வேதனை தெரிவித்துள்ளார்.
தெலுங்குத் திரை உலகில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்தவர் என்.டி.ராமாராவ். இந்த புகழ்தான் அவரை அரசியலிலும் சாதிக்க வைத்தது. இவர் சினிமாவில் நடித்த போது சென்னையில்தான் வசித்து வந்தார். தெலுங்கு ரசிகர்களை சந்திப்பதற்காக ஹைதராபாத் நகரில் 1971ம் ஆண்டு ஒரு வீடு கட்டினார். வாம் ஒரு முறை வந்து ரசிகர்களை அந்த வீட்டில் சந்திப்பார்.
1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய அவர் பின்னர் ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். லட்சுமி சிவபார்வதியை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து 1990-ம் ஆண்டு ஹைதராபாத் அருகே உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு வீடு வாங்கினார். இந்த வீட்டில்தான் 2-வது மனைவியுடன் கடைசி காலம் வரை வாழ்ந்தார்.
என்.டி.ராமராவ் மறைவுக்கு பிறகு சிவபார்வதி அந்த வீட்டில் வசித்து வந்தார். என்.டி.ராமராவ் பயன்படுத்திய பொருட்களை அவர் நினைவு சின்னமாக பாதுகாத்து வந்தார்.
இந்த நிலையில் பஞ்சாரஹில்ஸ் வீடு தனது பெயரில் உள்ளதால் அதற்கு உரிமை கோரி அமெரிக்காவில் வசிக்கும் என்.டி.ராமராவ் இளைய மகள் உமாமகேஸ்வரி ஹைதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு வசித்து வந்த சிவபார்வதி வெளியேற்றப்பட்டார்.
இப்போது அந்த வீடு இடிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. என்.டி.ராமராவ் வசித்த வீடு இடிக்கப்படுவதை பார்த்து அவரது மனைவி சிவபார்வதி கண்ணீர் வடித்தார். என்.டி.ராமராவ் வாரிசுகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
என்.டி.ராமராவ் பெயரை சொல்லி வளர்ந்தவர்கள் இன்று அவரது நினைவு சின்னங்களை அழித்து வருகிறார்கள். பணத்துக்காக அவர் வாழ்ந்து மறைந்த வீட்டை இடிக்கிறார்கள். பணம்தான் முக்கியம் என்று அறிவித்து இருந்தால் லட்சோப லட்ச ரசிகர்கள் தங்கள் பணத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்கி நினைவு சின்னம் ஆக்கியிருப்பார்கள்.
9 குழந்தைகள் பெற்றும் ஒருவர் கூட அவரது புகழை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வழி செய்யவில்லை. அவரது நினைவுகளை அழித்து வருகிறார்கள் இவ்வாறு சிவ பார்வதி கூறியுள்ளார்.
வணிக வளாகமாக மாறிய வீடு
என்.டி.ராமராவ் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் பாகப்பிரிவினை செய்து கொடுத்து விட்டார். இதில் ஹைதராபாத்தில் உள்ள வீடு அவரது மகன் ராமகிருஷ்ணாவுக்கு கொடுக்கப்பட்டது. அதனை அவர் தெலுங்கு தேச பிரமுகருக்கு விற்றுவிட்டார். வீட்டை வாங்கியவர் அதனை இடித்து பிரமாண்ட வணிக வளாகம் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications