புதுவையில் புத்தகக் கண்காட்சி -தொடங்கி வைத்தார் ரங்கசாமி

புதுச்சேரி வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கியதுடன், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களையும் முதல்வர் வெளியிட்டு வாழ்த்தினார்.
புதுவை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் பி. இராசவேலு, கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராசன் ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். புதுசேரிப் புத்தகச் சங்கத்திற்குச் சிறப்பான தொண்டு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. கோ.முருகன் அனைவருக்கும் நினைவுப்பரிசில் வழங்கினார்.
புத்தகச் சங்கத்தின் தலைவர் எம்.கே. சாயிகுமாரி அனைவரையும் வரவேற்றார். முனைவர் பாஞ். இராமலிங்கம் புத்தகச் சங்கத்தின் பணிகளை எடுத்துரைத்தார். புலவர் சீனு.இராமச்சந்திரன், புலவர் நாகி, புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் அரங்க. முருகையன் ஆகியோர் உரையாற்றினர்.
புத்தகக் கண்காட்சி 19-12.2012 முதல் 30.12.2012 வரை நடைபெற உள்ளது. காலையில் 11.30 முதல் இரவு 8.45 மணிவரை கண்காட்சி திறந்திருக்கும். இக்கண்காட்சியில் 104 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
செய்தி: முனைவர் மு.இளங்கோவன்












Click it and Unblock the Notifications