பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்றும் ஆஜர்: இன்னும் 300 கேள்விகள் பாக்கி!

Subscribe to Oneindia Tamil

Sasikala
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகி வரும் சசிகலா இதுவரை 825 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இன்னும் 300 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 19ம் தேதி முதல் தொடர்ந்து ஆஜராகி வரும் சசிகலா வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

நீதிபதி பாலகிருஷ்ணா கடந்த புதன் கிழமை கேட்ட 110 கேள்விகளுக்கும் நேற்று 83 கேள்விகளுக்கும் பதலளித்திருக்கிறார். இதுவரை இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா 825 கேள்விகளுக்கு பதலளித்திருக்கிறார்.

இதுவரை கேட்ட கேள்விகளை பொறுத்தவரை சசிகலா பங்குதாரராக பதவி வகித்த சசி எண்டர் பிரைசஸ் ஜெயா

பப்ளிகேஷன்ஸ் நமது எம்.ஜி.ஆர்., பேக்ஸ் யுனிவர்சல் மற்றும் வினோத் வீயோ விஷன் உள்ளிட்ட வங்கி ஆவணங்களின் அடிப்படடையில் பண பரிவர்த்தனை தொடர்பாக பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும், நல்லம்ம நாயுடுவின் அறிக்கையை சார்ந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் நாளையும் சசிகலா கோர்ட்டில் ஆஜராவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 2004ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து நடந்து வருகிறது. முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனையா கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது இந்த வழக்கினை நீதிபதி பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+