முன்னாள் சத்யம் அதிகாரிக்கு ரூ 65 லட்சம் அபராதம்
Subscribe to Oneindia Tamil

ராமலிங்க ராஜு தலைமையில் இயங்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின், முதலீட்டாளர்கள் உறவு பிரிவின் மூத்த தலைமை அதிகாரியாக இருந்தவர் டி.ஏ.என். மூர்த்தி.
2008-2009ஆம் நிதியாண்டில், உள்பேர வர்த்தக விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதற்காக, இவருக்கு ரூ 65 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது செபி.
மைடாஸ் இன்ஃபிரா லிமிடெட் (எம்டிஎல்), மைடாஸ் பிராப்பர்டீஸ் லிமிடெட் (எம்பிஎல்) ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்படாத விலைக் குறியீடு சார்ந்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று பங்கு பரிவர்த்தனை மையம் (செபி) தெரிவித்துள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ரூ 13000 கோடி வரை மோசடி நடந்திருப்பது அம்பலமான பிறகு அந்த நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு, மஹிந்திரா குழுமம் விலைக்கு வாங்கியது. இப்போது அதன் பெயர், மஹிந்திரா சத்யம் என மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications